வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா.!? இனி தினமும் பயன்படுத்துங்கள்! - CBSE INFO

Wednesday 10 November 2021

வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா.!? இனி தினமும் பயன்படுத்துங்கள்!

 தினமும் இரவு தூங்குவதற்கு முன்னதாக வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.

வெந்தயம் ஊறவைத்த தண்ணீரையும் வீணாக்காமல் குடித்து வந்தால் நல்ல பணால் கிடைக்கும்.

வெந்தயத்தை சாப்பிட்டு, வெந்தய நீரை குடித்து வந்தால் உடல் சூடு, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். எந்த நோயும் வரத்து. வெந்தயத்தை வானெலியில் வறுத்து, பொடியாக மாற்றிய பின்னர் மோர் அல்லது தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம்.

வெந்தயத்துடன் பெருங்காய பொடியை நீர் அல்லது மோரில் சேர்த்து குடித்து வந்தால் வயிறு கோளாறுகள், அஜீரணம் போன்றவை சரியாகும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வெந்தயத்தை நன்றாக வறுத்து, காபியுடன் சேர்த்து குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம் உடலின் இரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. வெந்தய விதையில் இருக்கும் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோக சத்து, அமினோ அமிலங்கள் போன்றவை மூலமாக உடலுக்கு நல்ல சக்திகள் கிடைக்கிறது. வெந்தயத்தின் இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கிறது.

இவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலின் சமநிலையையும் பாதுகாக்கிறது. கோடைகாலத்தில் வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு பிரச்சனை, வயிற்று புண் பிரச்சனை, வாய் துர்நாற்ற பிரச்சனை போன்றவை சரியாகும்.

வெந்தயத்தை தீப்பட்ட இடங்களில் அரைத்து பூசலாம். வயிற்றுப்போக்கை சரி செய்து, தாய்ப்பாலை பேருக்கும் தன்மையும் வெந்தயத்திற்கு உண்டு. பெண்களுக்கு முடிகொட்டும் பிரச்சனையை சரி செய்ய, வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு கட்டுக்குள் வந்து, முடி அடர்த்தியும் அதிகரிக்கும். இதனைப்போன்று பொடுகு, தலை அரிப்பு பிரச்சனையும் சரியாகும்.

No comments:

Post a Comment